விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா? இறக்குமதி செய்த வேட்பாளர் வேண்டுமா? வேலுமணி பிரசாரம்தேர்தல் நேரம்! வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் எஸ்எம்எஸ் வந்தால்?!ஏப். 3 முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்! உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை
/

ரூ.1,60,000 சம்பளத்தில் வேலை... பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

நீர் மின் உற்பத்தி நிறுவனமான என்எச்பிசி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 72 பயிற்சி பொறியாளர் பணியிடங்கள் குறித்து...

News image

72 பயிற்சி பொறியாளர் பணியிடங்கள்

கோப்புப்படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 7:21 am

இணையதளச் செய்திப் பிரிவு

1975 இல் மூன்று நீர்மின் திட்டங்களுடன் தொடங்கப்பட்ட என்எச்பிசி, காலப்போக்கில் வளர்ந்து இன்று நீர்மின் சக்தித் துறையில் ஒரு முதன்மையான பொதுத்துறை நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

நீர் மின் உற்பத்தி நிறுவனமான என்எச்பிசி், இந்தியா மற்றும் அண்டை நாடுகளில் நீர்மின் சக்தி மேம்பாட்டுத் துறையில் ஒரு முன்னணி நிறுவனமாக இருந்து வருகிறது. 'நவரத்னா' அந்தஸ்தையும் பெற்றுத் திகழும் இந்த நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 72 பயிற்சி பொறியாளர் பணிக்கான எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். NH/Rectt.02/2026

பணி: Trainee Engineer

காலியிடங்கள்: 72

துறைவாரியான பணியிடங்கள் விவரங்கள்:

பிரிவு: Civil

காலியிடங்கள்: 11

பிரிவு: Electrical

காலியிடங்கள்: 35

பிரிவு: Mechenical

காலியிடங்கள்: 26

தகுதி: பொறியில் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்திருப்பதுடன் கேட் - 2025, கேட்-2025 தேர்வில் தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,000

வயதுவரம்பு: 6.4.2025 தேதியின்படி 30-க்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: கேட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இது குறித்த விவரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ஓபிசி பிரிவினருக்கு ரூ.800. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர், பெண்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.nhpcindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 6.4.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.