50 ஆண்டுகள்! எம்ஜிஆருக்குப் பிறகு திரையரங்குகளில் ஹீரோவாக முதல்வர் விஜய்!தீவிரமடையும் போராட்டம்! மெரீனா மூடல்; மக்களுக்கு தடை!நீட் தேர்வை எதிர்த்து நாடாளுமன்றத்தில் திமுக தனியாகப் போராட்டம்! தொடரும் அமளி! நாடாளுமன்றம் 4-வது நாளாக முடங்கியது! நாடாளுமன்றத்தில் இந்தியா - பாஜக கூட்டணிகள் எதிரெதிரே போராட்டம்!தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மாணவர் கோரிக்கை நியாயமனது! - ராகுல் காந்திவிஜய் மீண்டும் படத்தில் நடிக்க வேண்டும் என ஆசை! அமைச்சர் வினோத்நீட் வழக்குகளை உடனடியாக விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்! பிரதமர் மோடிகிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள் இன்று தொடக்கம்! ஈரான் போருக்கு அமெரிக்கா ரூ. 3.6 லட்சம் கோடி செலவு! டாஸ்மாக் ஊழியா்களுக்கு அக்.1 முதல் இஎஸ்ஐ திட்டம் அறிவிப்பு நீதிபதிகளின் ஓய்வு வயதை 61-ஆக உயா்த்த பரிசீலினை: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல் மூலக்கூறு மருந்துகள் இறக்குமதி மீது 100% வரி: அமெரிக்கா திட்டத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்!
/

இந்திய விமானப்படையில் மருத்துவ உதவியாளர் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

இந்திய விமானப்படையில் காலியாகவுள்ள மருத்துவ உதவியாளர் பணியிடங்கள் குறித்து...

News image

இந்திய விமானப்படையில் மருத்துவ உதவியாளர் வேலை - Indian Air Force

Updated On :23 ஜூலை 2026, 12:00 pm IST

இந்திய விமானப்படையில் காலியாகவுள்ள மருத்துவ உதவியாளர் பணிக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு தகுதியான திருமணமாகாத ஆண்களிடம் இருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்த விபரம் வருமாறு:

பணி: Medical Assistant (Airmen Intake - 02/2027, Group - 'Y' Non - Technical

சம்பளம்: ரூ.26,900

வயது வரம்பு: +2 மட்டும் முடித்தவர்கள் 21 வயதிற்குள்ளும், டி.பார்ம், பி.பார்ம் போன்ற கூடுதல் தகுதி பெற்றவர்கள் 24 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

தகுதி: கணித பாடப்பிரிவில் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதாவதொரு பாடப்பிரிவில் +2 தேர்ச்சி பெற்று டி.பார்ம் அல்லது பி.பார்ம் படித்திருக்க வேண்டும்.

உடற்தகுதி: குறைந்தபட்சம் 152. செ.மீ.உயரம் இருக்க வேண்டும். மார்பளவு சாதாரண நிலையில் 77 செ.மீ. அகலம் இருக்க வேண்டும்: 5 செ.மீ. விரிவடையும் தன்மையுடன் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: இந்திய விமானப்படையால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, மருத்துவ தகுதித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டும் உடற்திறன் தகுதித் தேர்வுக்கு அழைக்கப்படுவர். உடற்திறன் தேர்வில் 1.6 கி.மீ.தூரத்தை 7 நிமிடங்களின் ஓடி கடக்க வேண்டும் மற்றும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் புஷ்-அப், சிட்-அப் மற்றும் ஸ்கவாட் (குந்துதல் பயிற்சி) பயிற்சிகளை செய்தல் போன்ற போட்டிகளும் நடத்தப்படும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்படும்.

எழுத்துத் தேர்வு ஆன்லைன் முறையில் நடைபெறும்.

உதவித் தொகை: பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ14,600 உதவித் தொகையுடன் ஒரு ஆண்டு பயிற்சி வழங்கப்படும். பின்னர் விமானப்படையில் நிரந்தரப் பணி வழங்கப்படும். எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி, இடம் போன்ற விவரங்கள் மின்னஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

எழுத்துத் தேர்வு செப்டம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறும். நேர்முகத் தேர்வுக்கு வரும்போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டுவர வேண்டும். .

விண்ணப்பக் கட்டணம்: ரூ.550 மட்டும். கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை: www.iafrecruitment.edcil.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக் கொள்ளவும். எழுத்துத் தேர்விற்கு வரும்போது கொண்டுவர வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 26.7.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

JOIN THE IAF AS AIRMEN IN GROUP ‘Y’ (NON-TECHNICAL) MEDICAL ASSISTANT TRADE FOR AIRMEN INTAKE...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.