மத்திய அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 4,500 இளநிலை செயலக உதவியாளர், டேட்டா என்டரி ஆபரேட்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து 2023 ஜனவரி 4 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் இதர விவரங்கள்:
மொத்த காலியிடங்கள்: 4,500
பணி: Lower Division Clerk (LDC)
பணி: Junior Secretariat Assistant (JSA)
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200
பணி: Data Entry Operator (DEO)
பணி: Data Entry Operator, Grade ‘A’
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100
தகுதி: பிளஸ் 2 அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 1.1.2022 தேதியின்படி 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். அதாவது 2.1.1995-க்கு முன்பாகவோ, 1.1.2004 தேதிக்கு பின்னரோ பிறந்திருக்கக் கூடாது.
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு, திறன் தேர்வு, தட்டச்சு தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100.
தேர்வு மையங்கள்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, கிருஷ்ணகிரி, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய இடங்களிலும், புதுச்சேரியிலும் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: https://ssc.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 4.1.2023
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.