தமிழ்நாடு மீன்வள சார்நிலை பணியில் அடங்கிய மீன்துறை சார் ஆய்வாளர்(மீன்வள மீனவ நலத்துறை) பதிவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணினிவழித் தேர்விற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு நவம்பர் 11 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: மீன்துறை சார் ஆய்வாளர்
காலியிடங்கள்: 24
சம்பளம்: மாதம் ரூ.35,900 - 1,13,500
தகுதி: மீன்பிடி தொழில்நுட்பம் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது அறிவியலை முக்கிய பாடமாகக் கொண்டு விலங்கியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது மீன்வள அறிவியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2022 தேதியின்படி கணக்கிடப்படும்.
பதிவுக் கட்டணம்: நிரந்தரப் பதிவுக் கட்டணம் ரூ.150.
தேர்வுக் கட்டணம்: ரூ.100 செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீட்டு விதிகளின் அடிப்படையில் விண்ணப்பத்தாரக்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும். பின்னர் கலந்தாய்விற்கு அழைக்கப்படுவர்.
தேர்வு மையங்கள்: சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, சேலம், வேலூர்
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 11.11.2022
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
பொன்னான வாய்ப்பு நழுவவிடாதீர்கள்... எஸ்பிஐ வங்கியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு!
அண்ணா பல்கலைக்கழத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!
ரூ.30,000 சம்பளத்தில் அரசு வேலை... விண்ணப்பிப்பது எப்படி?
தமிழக அரசு நியாய விலைக்கடையில் மாபெரும் வேலைவாய்ப்பு!
ரூ.67,390 சம்பளத்தில் பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
கிராம உதவியாளா் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியீடு