3,049 புரொபேஷனரி அதிகாரி காலிப் பணி: ஆக.21-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய பொதுத்துறை வங்கிகளில் உள்ள புரொபேஷனரி அதிகாரி, மேனேஜ்மென்ட் பயிற்சியாளர் காலிப் பணியிடங்களுக்கு ஆக.21-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
3,049 புரொபேஷனரி அதிகாரி காலிப் பணி: ஆக.21-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு


இந்திய பொதுத்துறை வங்கிகளில் உள்ள புரொபேஷனரி அதிகாரி, மேனேஜ்மென்ட் பயிற்சியாளர் காலிப் பணியிடங்களுக்கு ஆக.21-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம்(ஐபிபிஎஸ்) தெரிவித்துள்ளது.

பேங்க் ஆப் இந்தியா,  இந்தியன் வங்கி, பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட இந்திய பொதுத்துறை வங்கிகளில் 3,049 புரொபேஷனரி அதிகாரி, மேனேஜ்மென்ட் பயிற்சியாளர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. 

தகுதி: 21.8.2023 தேதியின்படி, ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.41,960

வயதுவரம்பு: 1.8.2023 தேதியின்படி, 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.850. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.  எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.175 மட்டும் கட்டணமான செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியான விண்ணப்பதாரா்கள் https://www.ibps.in என்ற இணையதளத்தின் மூலம் ஆக.21-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். 

முதல்நிலைத் தேர்வு மையங்கள்: தமிழ்நாட்டில் சென்னை,  மதுரை, கோயம்புத்தூர், கடலூர், ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோவில், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர்

மேலும், இடஒதுக்கீடு மற்றும் இதர தகுதி நிபந்தனைகள் பற்றிய கூடுதல் விவரங்களை https://www.ibps.in அல்லது இங்கே கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com