சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

தமிழ்நாடு அரசில் வேலை வேண்டுமா? - டிஎன்பிஎஸ்சி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

ஒருங்கிணைந்த உதவி நிலவியாளர் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்வதற்கான கணினிவழித்தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

News image
Updated On :2 ஜூன் 2023, 7:00 am

DIN


ஒருங்கிணைந்த உதவி நிலவியாளர் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்வதற்கான கணினிவழித்தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி) வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வேலைக்காக காத்திருப்பவர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளவும். இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள்  வரும் 23 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

பணி: உதவி நிலவியலாளர் (நீர்வளத் துணைன் நிலத்தடி நீர் பிரிவு)
காலியிடங்கள்: 11
தகுதி: புவியியல் துறையில் முதுகலை அறிவியல் பட்டம் அல்லது பயன்பாட்டு புவியியலில் முதுகலை அறிவியல் பட்டம் அல்லது முதுகலை அறிவியல் (தொழில்நுட்பம்) பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: உதவி நிலவியலாளர் (புவியியல் மற்றும் சுரங்கத் துறை)
காலியிடங்கள்: 29
தகுதி: புவியியலில் முதுகலை அறிவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
களப்பணியில் நடைமுறை அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

விண்ணப்பத்தாரர்கள் போதுமான தமிழறிவு பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.37,700 - 1,19,500

வயதுவரம்பு: 1.7.2023 தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி மற்றும் அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு வயதுவரம்பு இல்லை.  மற்று பிரிவினர் 18 - 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

தேர்வு மையங்கள்: சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி 

விண்ணப்பிக்கும் முறை:  www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.6.2023

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.