ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

புல்வாமா, விமானி விவகாரங்களை மோடி அரசு அரசியலாக்குகிறது: சிபிஐ தேசிய செயலர் விமர்சனம்

சிஆர்பிஎஃப் படுகொலை உள்ளிட்ட எல்லை விவகாரங்களை மத்திய மோடி அரசு அரசியலாக்குகிறது என்று சிபிஐ தேசிய செயலர் பினோய் விஸ்வம் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :28 பிப்ரவரி 2019, 2:38 pm

சிஆர்பிஎஃப் படுகொலை உள்ளிட்ட எல்லை விவகாரங்களை மத்திய மோடி அரசு அரசியலாக்குகிறது என்று சிபிஐ தேசிய செயலர் பினோய் விஸ்வம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

தேசப் பாதுகாப்பு அப்பட்டமான அரசியலாக்கப்படுவது குறித்து தான் 21 எதிர்கட்சிகள் இணைந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தேசத்தின் பாதுகாப்பை வாக்குகளாக்க பாஜக முயற்சிக்கிறது. நாடு தற்போது இருக்கும் இந்த இக்கட்டான சூழலில் கூட பாஜக தங்கள் தேர்தல் பணிகளை துவக்கியுள்ளது. 

இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் முற்றிலும் மத்திய அரசின் இயலாமையை காட்டுகிறது. துணை ராணுவப் படைகளின் ஊதியம் உயர்த்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளின் உதவித்தொகையையும் நிறுத்தியுள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.