காதல் மனைவியுடன் தகராறு: மதுபோதையில் மகன்களை கொன்று தந்தை தற்கொலை

மதுபோதையில் இரண்டு மகன்களையும் கொன்று தந்தையும் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 
காதல் மனைவியுடன் தகராறு: மதுபோதையில் மகன்களை கொன்று தந்தை தற்கொலை
Updated on
1 min read

மதுபோதையில் இரண்டு மகன்களையும் கொன்று தந்தையும் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. குண்டூர் மாவட்டத்தில் உள்ள சிலகலூரிபேட்டாவில் வியாழக்கிழமை இச்சோகச் சம்பவம் நடந்துள்ளது. வெலகோடி ரமணா மூர்த்தி (35) என்பவருக்கு மதுப்பழக்கம் அதிகம் இருந்துள்ளது. இதனால் மனைவி மற்றும் உறவினர்களுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் குடிப்பழக்கம் காரணமாக தனது சொத்துக்களையும் இழந்துள்ளார்.

இந்நிலையில், மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய ரமணா, புதன்கிழமை மதுபோதையில் திடீரென வீட்டுக்குள் நுழைந்து தனது இரண்டு மகன்களையும் (பவானி நாக தினேஷ் (8) மற்றும் சாய் (7)) ஆகியோரை கழுத்தறுத்து கொலை செய்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை அப்பகுதி போலீஸ் அதிகாரி ஸ்ரீநிவாஸ ராவ் உறுதிபடுத்தினார். 

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கோடிலட்சுமி என்பவரை காதல் திருமணம் செய்த ரமணா, சிலகலூரிபேட்டாவில் உறவினரின் கடையில் வேலை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com