தலைமைச் செயலகத்தில் 'புகை'க்கு தடை

இரு தலைமைச் செயலக அலுவலகங்களிலும் புகை பிடிக்க தடை விதித்து முதல்வர் ரகுபீர் தாஸ், புதன்கிழமை நடவடிக்கை எடுத்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் 'புகை'க்கு தடை
Updated on
1 min read

ஜார்கண்ட் அரசு தலைமைச் செயலகத்தில் புகைக்கு தடை விதித்துள்ளது. விரைவில் இதர அரசு அலுவலகங்களுக்கும் இந்த விதிமுறை அமல்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.

அம்மாநிலத்தின் இரு தலைமைச் செயலக அலுவலகங்களிலும் புகை பிடிக்க தடை விதித்து முதல்வர் ரகுபீர் தாஸ், புதன்கிழமை நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதேபோன்று தேசிய அளவில் சிறந்த சுகாதார மாநிலங்களில் சத்தீஸ்கருக்கு அடுத்தபடியாக ஜார்கண்ட் இரண்டாம் இடம்பிடித்துள்ளது. மேலும் பசுமையை ஊக்குவிக்கும் விதமாக ஜார்கண்ட் மாநிலத்தின் அனைத்து மாநகராட்சிகளிலும் வாடகை சைக்கிள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட இந்த சைக்கிள்களை வாடைக்கு எடுக்க ரூ.30, ரூ.200 மற்றும் ரூ.1,000 ஆகிய கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com