75 குற்றச்சாட்டுகளுடன் 'டிமிக்கி' கொடுத்த ஆட்டோ ஓட்டுநர் கைது

தொடர்ச்சியாக சாலை விதிமீறல் குற்றச்சாட்டுகளில் சிக்கி போக்கு காட்டிக்கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர் புதன்கிழமை பிடிபட்டார். 
75 குற்றச்சாட்டுகளுடன் 'டிமிக்கி' கொடுத்த ஆட்டோ ஓட்டுநர் கைது
Updated on
1 min read

தொடர்ச்சியாக சாலை விதிமீறல் குற்றச்சாட்டுகளில் சிக்கி போக்கு காட்டிக்கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர் புதன்கிழமை பிடிபட்டார். தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர், கடந்த 2017-ஆம் ஆண்டு மே மாதம் முதல் சாலை விதிகளை மீறியதற்காக 74 குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளார். அபராதத் தொகையாக ரூ.12,555 சேர்ந்துள்ளது. 

இந்நிலையில், 75-ஆவது சாலை விதிமீறல் (சிக்னலை மீறிச் சென்றது) குற்றத்தில் ஈடுபட்ட போது சைபராபாத் டிராஃபிக் கான்ஸ்டபிள் ராஜுவால் பிடிபட்டார். பின்னர் மாதாபூர் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனில் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டார். எஸ்ஐ மாதவ் ரெட்டி, அந்த ஆட்டோவை பறிமுதல் செய்தார். 

முன்னதாக, சாலை விதிமீறல் தொடர்பாக 100 குற்றச்சாட்டுகள் மற்றும் ரூ.16,000 அபராதத்தொகையுடன் டிமிக்கி கொடுத்து வந்த கால் டாக்ஸி ஓட்டுநர், காசிபௌலி அருகே சமீபத்தில் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com