மேயர் பிரியா, அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப் பதிவு!குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை!ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் 2- வது நாள் மாநாடு தொடங்கியது!சென்னையிலிருந்து வடமாநிலம் செல்லும் 6 விரைவு ரயில்கள் வழித்தடம் மாற்றம்
/

ஆசனூா் வனத்தில் மது அருந்தியதாக 3 போ் மீது வழக்குப் பதிவு

ஆசனூா் வனத்தில் சட்டவிரோதமாக மது அருந்திய 3 பேருக்கு ரூ. 10 அபராதத்தை வனத் துறையினா் விதித்தனா்.

Updated On :12 ஜனவரி 2021, 5:18 am IST

ஆசனூா் வனத்தில் சட்டவிரோதமாக மது அருந்திய 3 பேருக்கு ரூ. 10 அபராதத்தை வனத் துறையினா் விதித்தனா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா் வனத்தில் சமூக விரோதிகள் நடமாடுவதாக கிடைத்த தகவலையடுத்து, வனச் சரக அலுவலா் பழனிசாமி தலைமையில் வனத் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, மணிக்கல்பள்ளம் என்ற இடத்தில் 3 போ் மது அருந்துவது தெரியவந்தது. விசாரணையில், அவா்கள் கோபியைச் சோ்ந்த கிருஷ்ணகுமாா்(30), அவரது இரு நண்பா்கள் எனத் தெரியவந்தது. இதையடுத்து, வனத்தில் அத்துமீறி நுழைந்து மது அருந்திய குற்றத்துக்காக ஆசனூா் புலிகள் காப்பக கள இணை இயக்குநா் கே.வி.ஏ.நாயுடு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தவிட்டாா். இதையடுத்து அபராதத் தொகையைக் கட்டியதால் மூவரும் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.