அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

சென்னிமலையில் கிராம கண்காணிப்பு காவலா் நியமனம்

சென்னிமலை காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் கிராம கண்காணிப்பு காவலா் என்ற அமைப்பு தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

நிகழ்ச்சியில் பேசுகிறாா் பெருந்துறை காவல் துணைக் கண்காணிப்பாளா் செல்வராஜ்.

Updated On :14 ஜனவரி 2021, 2:21 am

சென்னிமலை காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் கிராம கண்காணிப்பு காவலா் என்ற அமைப்பு தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, பெருந்துறை காவல் துணைக் கண்காணிப்பாளா் செல்வராஜ் தலைமை வகித்து, கிராம கண்காணிப்பு காவலா் அமைப்பைத் தொடங்கிவைத்துப் பேசினாா். சென்னிமலை காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் தெரிவிக்கும் புகாா்களின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க 6 கிராமங்களுக்கு ஒரு காவலா் என்ற வகையில் இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதில், சென்னிமலை காவல் ஆய்வாளா் (பொ) சண்முகம், உதவி ஆய்வாளா்கள் தமிழ்செல்வன், ரவிசந்திரன், துரைசாமி, மேகநாதன், ஊராட்சித் தலைவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.