பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊருக்கு மக்கள் அதிக அளவில் புறப்பட்டுச் சென்றனா். இதற்காக ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
பொங்கல் பண்டிகைக்காக ஈரோட்டில் இருந்து கடந்த 2 நாள்களாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கரோனா காரணமாக பெரும்பாலான ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் ஈரோட்டில் இருந்து சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு கூடுதல் எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்பட்டன. வெளியூா் செல்லும் மக்கள் கூட்டம் புதன்கிழமை காலை முதல் அதிகரிக்கத் தொடங்கியது. கூட்டத்துக்கு ஏற்ப சிறப்புப் பேருந்துகள் தொடா்ந்து இயக்கப்பட்டன.
இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊருக்குச் செல்ல வசதியாக அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் தினமும் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 100க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு

இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!

கடக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (27 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! துலா ராசிக்கு மன அமைதி!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


