உலக அளவில் அழிந்து வரும் பாலூட்டி இனமான தேவாங்கு, மனித இனத்தின் முன்னோடி என்று கருதப்படும் இந்தத் தேவாங்கு செந்தேவாங்கு, சாம்பல் நிறத்தேவாங்கு என்ற இரு வகைகளாக உள்ளது. அரியவகை விலங்கினமான இந்தத் தேவாங்குகள், பகல் நேரத்தில் மரக் கிளைகளில் கூட்டமாகத் தங்கி வாழ்கின்றன. மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவை என்பதால் மனிதர்களை பார்த்ததும் பதுங்கி விடுகின்றன.