பாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்!
சுமிதாவுக்கும், ஷோபாவுக்கு இறப்பிலும் ஒரு ஒற்றுமை உண்டு. தமிழில் ஷோபா நடித்த பசி திரைப்படத்தின் இந்தி பதிப்பில் சுமிதா நடித்திருந்தார். இருவருமே அத்திரைப்படம் வெளியாகி 100 நாட்கள் கண்டதும் இறந்து விட்டனர் என்பது அதிர்ச்சியான செய்தி.
நடிப்பிற்கு இலக்கணம் தந்த இந்திய நடிகைகளில் முக்கியமானவர் சுமிதா பட்டீல்
தமிழில் இவரோடு ஒப்பிடத் தகுந்த அளவில் பாந்தமான நடிப்பை வழங்கியவரென்றால் அது நடிகை ஷோபா மட்டுமே என்பார்கள்!
கணவர் ராஜ் பப்பருடன் ஒரு இந்தித் திரைப்படத்தில் சுமிதா
சுமிதா மறைந்து நேற்றோடு 33 வருடங்கள் நிறைவடைந்தன. டிசம்பர் 13, 1986 ல் பிரசவச் சிக்கலில் சுமிதா சிகிச்சை பலனின்றி இறந்தார்.
சுமிதா மறைந்த பின்னர் அவர் நடிப்பில் 10 படங்கள் வெளியாகி பெரு வெற்றி பெற்றன
சுமிதாவை நினைவு கூர விரும்புகிறவர்கள் இன்னும் இருக்கிறார்கள். தமிழில் ‘அரண்மனைக் கிளி’ தொடரில் நாயகியின் மறைந்த அம்மாவாக சுமிதாவின் புகைப்படம் காட்டப்படுகிறது.
சுமிதா நடித்த இந்தித் திரைப்படங்களில் மிர்ச் மசாலா முக்கியமானது.
இந்தத் திரைப்படத்தில் சுமிதாவின் நடிப்பு சிறந்த நடிப்பை வழங்கிய 25 திரைப்படங்களின் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது.
நடிகர் ஹிருத்திக் ரோஷனின் தந்தை ராகேஷ்ரோஷனுடன் சுமிதா
சுமிதாவும், சப்னா ஆஸ்மியும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட திரைப்படம்
சுமிதாவைப் பற்றிய சர்ச்சைகளில் ஒன்று அவர் முன்பே திருமணமானவரான நடிகர் ராஜ் பப்பருக்கு இரண்டாம் மனைவியானது.
சுமிதாவுக்கு தேசிய விருது பெற்றுத் தந்த மிர்ச் மசாலா திரைப்படம்
ரிச்சர்ட் அட்டன்பரோவின் ‘காந்தி’ திரைப்படத்துக்கான போட்டோஷூட். இதில் சுமிதா, நஸ்ருதீன் ஷா ஜோடிக்குப் பதிலாக பென் கிங்ஸ்லீ, ரோகினிஹட்டங்காடி ஜோடி தேர்வு செய்யப்பட்டது.
சுமிதா நடிப்பில் வெளிவந்த பூமிகா திரைப்படம். தேசிய விருது பெற்றுத்தந்த இத்திரைப்படத்தில் சுமிதா ஒரு நடிகையாக நடித்திருந்தார்.
மொழி வித்தியாசமின்றி இந்திய நடிகைகள் பலருக்கும் பிரியமான நடிகையாக விளங்கிய சுமிதா பட்டீல் தனது 31 வயதில் பேறுகாலச் சிக்கலில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.