பத்ம விருது வழங்கி கெளரவிப்பு

2018ஆம் ஆண்டுக்கான நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகள் வழங்கும் விழா குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வழங்கி கெளரவித்தார். இதில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டது. அதன்படி இசைஞானி இளையராஜா உட்பட மூன்று பேருக்கு பத்ம விபூஷண் விருதும், கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி உட்பட ஒன்பது பேருக்கு பத்ம பூஷண் விருதும் தமிழகத்தை சேர்ந்த நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் உட்பட 72 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது. இவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
பத்ம விருது வழங்கி கெளரவிப்பு
Updated on

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com