ஜெமினி பாலம் அருகே மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வரும் நிலையில் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது, இதில் மாநகர பேருந்து, காரும் பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளானது. சம்பவயிடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் காரையும், பேருந்துந்தையும் கிரேன் மூலம் மீட்டனர். இந்நிலையில் பாதுகாப்புடன் மெட்ரோ ரயில் வழித்தடத்திற்கான சுரங்கப்பாதையை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.