மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சாலைகள், ரயில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கி உள்ளன. திரும்பிய திசையெங்கும் வெள்ளக்காடாக காட்சியளிப்பதால் மக்களின் இயல்பு நிலை அடியோடு முடங்கியது. சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழைநீர் சூழ்ந்தது. ஒரே நாளில் சாலை, ரயில் மற்றும் விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மேலும் கனமழை தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.