கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழையால் நிரம்பிய அணைகள் பாதுகாப்பு கருதி திறக்கப்பட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குடியிருப்பு பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது தண்ணீர். இந்நிலையில் நீரானது மலை பகுதிகள், சாலைகள், கிராமங்கள் என எல்லாமும் தனது காட்டுப்பாட்டில் வைத்துள்ளது.