சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து சென்னை வேளச்சேரியில் ரயில்வே துறைக்கு சொந்தமான 5 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடத்தில் ஆக்கிரமிப்புகளை, போலீஸாரின் பாதுகாப்புடன் மாநகராட்சி ஊழியர்கள், ரயில்வே, வருவாய்ஊழியர்கள், சி.எம்.டி.ஏ, மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து செயல்பட்டனர். இதையடுத்து, 500க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, அங்கு ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 400க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் அகற்றப்பட்டன.