சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரசினால் அங்கு பலர் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் உள்ள வுகான் நகரில் உள்ள இந்தியர்களை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. இதன் ஒரு பகுதியாக ஏர் இந்தியாவின் போயிங் 747 ரக சிறப்பு விமானம் மூலம் உகான் நகரில் இருந்து தில்லி சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட இந்தியர்கள்.