நபிகள் நாயகத்தின் பேரன் இமாம் ஹுசைன், கர்பலா போர்க்களத்தில் (தற்போது இராக்கில் இருக்கிறது) உயிர்துறந்தார். அவருடைய நினைவாக ஆண்டுதோறும் இஸ்லாமிய ஆண்டின் தொடக்க மாதமான முஹற்றத்தின்போது முஹற்றம் திருநாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் தங்களைப் பல்வேறு விதங்களில் வதைத்துக் கொள்கின்றனர்.
முஹற்றத்தையொட்டி இராக்கிலுள்ள கர்பலா நகரில் இமாம் ஹுசைன் நினைவு புனிதத் தலத்தில் தொழுகையில் ஈடுபட்ட ஷியா பிரிவு முஸ்லிம்கள்