வங்கக்கடலில் உருவான மிக்ஜம் புயல் காரணமாகவும், அதே வேளையில் வங்கக்கடலில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகவும் தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால், ஊர்ந்து செல்லும் வாகனங்களுக்கிடையே குடையை பிடித்து கொண்டு மெதுவான நடந்து செல்லும் பொதுமக்கள்.
வங்கக்கடலில் உருவான மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மீன்பிடி படகுகள்.
கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மீன்பிடி படகுகள்.
சென்னையில் கனமழை தொடர்ந்து பம்ப் செட் மோட்டார் மூலம், வெளியேற்றப்படும் மழைநீர்.
தேங்கிய மழைநீரில் நடந்து செல்லும் பொதுமக்கள்.
மோட்டார் மூலம், வெளியேற்றப்படும் மழைநீர்.
கனமழையால் மழைநீரில் மூழ்கிய சிஎஸ்ஐ நடுநிலைப் பள்ளி வளாகம்.
அரும்பாக்கத்தில் தொடர் மற்றும் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியுள்ள சாலை.
கனமழையால் குமரன் நகர் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் செங்குன்றம் தீயணைப்புத் துறையினர்.
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் செங்குன்றம் நீர்த்தேக்கத்தின் மதகுகள் திறந்து விடப்பட்டது.