நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னையில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக திமுக தலைமையிலான பேரணியில் திமுக தலைவர் ஸ்டாலின், வைகோ, ப.சிதம்பரம், கே.பாலகிருஷ்ணன் உள்பட பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்த பேரணி எழும்பூரில் தொடங்கி ராஜரத்தினம் மைதானம் வரை நடைபெற்றது. இந்நிலையில் பேரணியில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கானோர் மீதும், பேரணியை தலைமையேற்று நடத்திய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.