மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனையடுத்து 71 கிலோ எடைகொண்ட பிரம்மாண்ட கேக் வெட்டப்பட்டு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதை தொடர்ந்து ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார். விழாவில் அமைச்சர்கள் வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், கருப்பணன், தங்கமணி, செங்கோட்டையன் ஆகியோர் பங்கேற்றனர்.