மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

7.3.1976: அரை மணியில் அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு - விண்வெளி 'ஷட்டில்' பற்றி யு.எஸ். வீரர்

விண்வெளிப் போக்குவரத்து ஊர்தி பற்றி அமெரிக்க வீரர் கூறியது...

News image
7.3.1976
Updated On :6 மார்ச் 2026, 10:30 pm

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை, மார்ச். 4- விண்வெளிப் போக்குவரத்து ஊர்தி (ஷட்டில்) 1980-ம் வருஷத்துக்குள் நிதர்சன உண்மையாகிவிடும்; விண்வெளிப் பயணமும், உலகில் பிரயாண முறைகளும் அதனால் புரட்சிகரமான மாறுதலை அடைந்துவிடும் என்று, சென்னை வந்துள்ள யு.எஸ் விண்வெளி வீரர் ஆலன் பீன் இன்று கூறினார்.

இந்த விண்வெளி போக்குவரத்து ஊர்தியானது, ஓரளவு ஆகாய விமானமாகவும், ஓரளவு விண்வெளி கப்பலாகவும் இருக்கும் என்றார்.

விமானப் பயணத்தைவிட இதில் செல்வது மலிவானதாக இருக்கும். பயண நேரமும் குறைந்து விடும் என்றார்.

நிலாத் தரையில் நடந்த 4-வது மனிதரான காப்டன் ஆலன் பீன், இப்போது விண்போக்குவரத்து ஊர்தி (ஷட்டில்) பயிற்சி பெற்று வருகிறார்.

விண்வெளி நிலையம் ஒன்றை அமைக்கவும் இந்த ஊர்தி துணை புரியும் என்றார். இந்த விண்வெளி ஊர்தியின் உதவியுடன், அந்த நிலையத்தில் சகலவிதமான கருவிகளுடனும் கூடிய ஒரு சிறிய ஆய்வுக் கூடம் அமைக்க முடியும் என்றார் ஆலன் பீன்.

அப்பாலோ ரக விண்வெளி கப்பல்கள் மேற்கொண்ட விண்வெளிப் பயணங்களைவிட, இந்த விண்வெளி "ஷட்டில்" பயணத்துக்கு செலவும் மிகமிகக் குறைவாகவே ஆகும்; ஏனெனில், இந்த ஊர்தியைத் தரைக்கு மீண்டும் கொண்டு வந்து, மறுபடியும் விண்வெளிப் பயணத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றார்.

விண்வெளி ஷட்டில் உபயோகத்துக்கு வந்து விட்டால், இந்த சென்னை நகரமானது அமெரிக்காவிலுள்ள லாஞ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அடுத்த வீடு போல ஆகிவிடும். அரைமணி நேரத்தில் அங்கிருந்து இங்கு பறந்து வந்து விட முடியும் என்றார்.

சென்னை, மார்ச். 6 - பயிரிடும் சாகுபடியாளர் பாதுகாப்பு சட்டத்தில் ஒரு திருத்தம் செய்து த.நா. கவர்னர் ஒரு அவசரச் சட்டம் பிறப்பித்திருக்கிறார்.

இதன்படி பயிரிடும் சாகுபடியாளர்கள் வசமுள்ள நிலங்களை நிலசுவான்தார்கள் எந்த சந்தர்ப்பத்திலும் சொந்த சாகுபடிக்கென்று திரும்பப் பெற முடியாது என்று விதிக்கப்பட்டிருக்கிறது. (குறிப்பிட்ட சில நிலைமைகளில் நிலசுவான்தார்கள் இந்த நிலங்களில் பாதியை மீண்டும் தாமே சுவாதீனப்படுத்திக் கொள்ளலாம் என்ற உரிமை இந்த அவரசச் சட்டத்தின் மூலம் ரத்து செய்யப்படுகிறது.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.