தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

உறுப்பு மாற்றம்: 50 ஆயிரம் இதயம் தேவைப்படும் நிலையில் 15 மட்டுமே கிடைக்கிறது

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தேவை அதிகமாக இருக்கும் நிலையில் குறைந்த அளவிலான உறுப்புகளே கிடைக்கின்றன.

News image
Updated On :11 டிசம்பர் 2015, 9:27 am

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தேவை அதிகமாக இருக்கும் நிலையில் குறைந்த அளவிலான உறுப்புகளே கிடைக்கின்றன. ஆண்டுக்கு 2 லட்சம் கிட்னி தேவைப்படும் நிலையில் 6 ஆயிரம் மட்டுமே கிடைக்கிறது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நாடா கூறினார்.

மக்களவையில் இன்று நடைபெற்ற கேள்வி நேர விவாவத்தின் போது இதை தெரிவித்த அமைச்சர், ஆண்டுக்கு 30,000 நுரையிரல் தேவைப்படும் நிலையில் 1,500 மட்டுமே கிடைக்கிறது.

இதேபோன்று இதயத்தை பொறுத்தவரையில் 50 ஆயிரத்துக்குப் பதில் 15 மட்டுமே கிடைக்கிறது என்றார்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தேவைக்கும் தற்போது கிடைப்பதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது.

இறக்கும் தருவாயில் உள்ள நபர்களிடமிருந்து நல்ல நிலையில் உள்ள உறுப்புகளை தானமாக பெறுவதற்கு அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது என்றார் அமைச்சர்.

உறுப்பு தானத்தை மேம்படுத்துவதற்காக அமைச்சகங்களுக்கு இடையே ஓர் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

உறுப்பு தானம் குறித்த ஒருங்கிணைப்பாளர்களை மருத்துவமனைகளில் நியமிப்பதற்காக, தேசிய உறுப்பு மாற்று திட்டத்தின் கீழ் நிதியுதவி அளிக்கப்படுகிறது.

மண்டல அளவிலான உறுப்பு மாற்று மையங்களை நிறுவுவதற்காக தமிழ்நாடு, மகாராஷ்டிரம், அஸ்ஸாம், சண்டீகர் மாநிலங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ள என்றார் அமைச்சர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.