வாசனைக்காக மட்டும் மசாலா டீ மற்றும் பாயாசத்தில் நாம் சேர்த்துக் கொள்ளும் ஏலக்காயில் எவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? அதிலும் குறிப்பாக ஏலக்காயைத் தண்ணீரில் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரை குடிப்பதன் மூலம் வாய் துர்நாற்றம், செரிமானக் கோளாறு போன்ற பல பிரச்னைகள் தீரும்.
இவற்றைத் தவிர மன அழுத்தத்தைக் குறைப்பது, ஜலதோஷம் மற்றும் காய்ச்சலை குறைப்பது, புற்றுநோய் வராமல் தடுப்பது, ரத்த அழுத்தத்தைச் சரி செய்வது என இன்னும் பல நன்மைகளை இந்த ஏலக்காய் தண்ணீரின் மூலம் நாம் பெறலாம்.
பொதுவாகவே உடலில் நீர் சத்து குறையாமல் இருக்கத் தினமும் குறைந்தது 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்கிறது ஆராய்ச்சி முடிவுகள். வெறும் தண்ணீரை குடிப்பதை விட அதில் இவ்வாறு ஏலக்காய் போன்ற விஷயங்களைச் சேர்த்து குடிப்பது அதிக பலனை தரக்கூடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.