தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

கோடையில் உடல் குளுமையாக இருக்க

உடல் வாகினால் தேகச்சூடு இருந்தாலோ, வெயில்  அதிகமாக இருப்பதினால் உடலில்

News image
Updated On :23 மே 2017, 9:58 am

உடல் குளுமையாக இருக்க 

உடல் வாகினால் தேகச்சூடு இருந்தாலோ, வெயில்  அதிகமாக இருப்பதினால் உடலில் உஷ்ணம் ஏற்பட்டாலோ கவலைப்படாதீர்கள். ஒரு பிடி ஜவ்வரிசியை எடுத்துக் கொள்ளுங்கள். வெறும் வாணலியில் எண்ணெய் விடாமல் வறுத்துக் கொள்ளுங்கள். மிக்ஸியில் போட்டு மாவாக்கிக் கொள்ளுங்கள். முடியவில்லையா? முழுசாகவே எடுத்துக் கொள்ளுங்கள். கஞ்சியாக வைத்துக்கொண்டு, தேவைக்கு சர்க்கரை பால் சேர்த்தோ அல்லது உப்பும்  மோரும் கலந்தோ குடித்துப் பாருங்கள். டி. வி. விளம்பரத்தில் உடல் கூலாகி விட்டால், போலார் கரடி குதிப்பது போல் காட்டுவார்களே, அந்த ஃபீலிங்கை உணர்வீர்கள். 

புளித்த ஏப்பம் வராமலிருக்க 

தடபுடலான விருந்தில் கலந்து கொண்டு, ஒரு பிடி பிடித்துவிட்டீர்களா? எண்ணை பலகாரத்தை ஒரு கை பார்த்து விட்டீர்களா? ஜீரணம் ஆகாமல் 'பாவ் பாவ்’ என்று ஏப்பம் வந்து அருகிலிருப்பவர்கள் முகம் சுளிக்கும் வகையில் தொல்லை கொடுக்கிறதா? உங்களுக்கே எரிச்சல் உண்டாகும் வகையில் புளித்த ஏப்பம் ஏடாகூடமாய் வருகிறதா? ஒரு டேபிள் ஸ்பூன் ஓமத்தை ஊறவைத்து, ஒரு சிட்டிகை உப்பு, இரண்டு மிளகுடன் நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். சிறிது நல்லெண்ணெய்யைக் காயவைத்து, அதில் அரைத்த விழுதை, சிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு, பொரித்து எடுத்து சாப்பிடுங்கள். அஜீரணம் அப்ஸ்காண்ட் ஆகிவிடும். 

- மாலதி சந்திரசேகரன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.