தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

1.5 கோடி குழந்தைகளுக்கு தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி

தமிழகத்தில் இதுவரை 1.5 கோடி குழந்தைகளுக்கு தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.

News image
Updated On :21 மார்ச் 2017, 8:01 pm

தமிழகத்தில் இதுவரை 1.5 கோடி குழந்தைகளுக்கு தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.
தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி திட்டம் தொடர்பாக தமிழக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பாக பேரவையில் திமுக உறுப்பினர் பூங்கோதை அரசின் கவனத்தை ஈர்த்துப் பேசினார்.
இதற்கு பதிலளித்து அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியது:
தமிழகத்தில் மொத்தம் 1.76 கோடி குழந்தைகளுக்கு போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 1.5 கோடி பேருக்கு இதுவரை தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மார்ச் 16 -ஆம் தேதி முதல், விடுபட்ட குழந்தைகளுக்கு பள்ளிகள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் தேவைக்கேற்ப சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுதவிர, இந்திய குழந்தைகள் மருத்துவச் சங்க மருத்துவர்களால் நடத்தப்படும் மருத்துவமனைகளிலும் மார்ச் 31 -ஆம் தேதி வரை இந்தத் தடுப்பூசி போடப்படும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.