
சத்துக்கள் : இரும்புச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி நிறைந்துள்ளது.
தீர்வு : கொத்தவரங்காய் (5), கோவக்காய் (5) இரண்டையும் நன்றாக கழுவி நறுக்கி மிக்ஸியில் போட்டு அதனுடன் முருங்கை விதை (5) இவை மூன்றையும் மிக்ஸியில் போட்டு அதனுடன் புதினா (சிறிதளவு), சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி காலை வேளையில் குடித்து வரவும். கொத்தவரங்காய், கோவைக்காய் இவை இரண்டையும் பொடியாக நறுக்கி நீராவியில் வேக வைத்து அதனுடன் தேங்காயை துருவி நிறைய சேர்த்து பொறியலாக ஒரு வேளை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
அத்தி மரப்பட்டையை எடுத்து கஷாயம் வைத்துக் காலை மற்றும் மாலை வேளை குடித்து வந்தால் சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுவது நிற்கும்.
வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.