சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

குடிப்பதால் ஏற்படும் தொப்பைக் கரைய இது உதவும்

அதிகமாக மது அருந்துபவர்களுக்கு உண்டாகும் உடல் பருமன் குறைய உதவும்  உன்னதமான உணவு

News image

alchohol

Updated On :31 ஜனவரி 2024, 6:42 pm IST


கோவக்காய் வரகு அரிசி மோர்க் கஞ்சி

தேவையான பொருட்கள்

கோவக்காய் - 10
கொத்தவரங்காய் - 10
வரகரிசி - 100 கிராம்
பாசிப் பருப்பு - 50  கிராம்
ஓமம் - ஒரு ஸ்பூன்
மோர் - 200 மி.லி
சின்ன வெங்காயம் -  5
உப்பு - தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கோவக்காய் மற்றும் கொத்தவரங்காயை நீராவியில் வேக வைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து ஜூஸாக்கி வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
  • சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வரகரிசியை சுத்தம் செய்து கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த வரகரிசி மற்றும் பாசிப் பருப்பு ஆகியவற்றச் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைக்கவும்.
  • நன்கு வரகு அரிசி வெந்தவுடன் அனைத்தையும் சேர்த்து நன்கு மசித்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் ஓமம் மறாறும் சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கி அதில் மசித்து வைத்துள்ள வரகு அரிசி மசியலை சேர்த்து அதில் கோவக்காய் ஜூஸ், மோர் மற்றும் தேவையான அளவு உப்புச் சேர்த்து நன்கு கலக்கி ஒரு கொதிவிட்டு இறக்கி வைத்து கொள்ளவும்.

பயன்கள்

  • மது அருந்துபவர்களுக்கு உண்டாகும் உடல் பருமன்  குறைய இந்தக் கஞ்சியை ஒரு வேளை உணவாக  உட்கொள்ளலாம்.
  • மேலும் அவர்களுக்கு உண்டாகும் செரிமானக் குறைபாட்டை சீர் செய்யும் அற்புதமான கஞ்சி இந்த கோவக்காய் வரகு அரிசி மோர்க் கஞ்சி.

தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.