மனச்சோர்வு நோய்

அழுத்திக் கொல்லும் வாழ்க்கையின் அவலங்களும், சமுதாயச் சூழல் மற்றும் வாழ்க்கைச்
மனச்சோர்வு நோய்

ழுத்திக் கொல்லும் வாழ்க்கையின் அவலங்களும், சமுதாயச் சூழல் மற்றும் வாழ்க்கைச் சூழலில் ஏற்படும் ஏமாற்றங்களும் தாக்குதல்களும் இளைத்த மனங்களை பாதிக்காமல் விடாது. மனதின் இயல்பு நிலைகளில் தொய்வும், தளர்ச்சியும் உண்டாகும்.

மனத்தளர்ச்சியை, விரக்தியை தன்னம்பிக்கை கொண்டவர்களால் எதிர்த்து முறியடித்து இயற்கையான மனநிலைக்கு மீள முடியும். ஆயினும் பெரும்பாலானவர்களை மனச்சோர்வு நோய் ஆட்டி அலைக்கழித்து விடுகிறது. ஒரு சிலரோ தற்கொலை செய்து கொள்ளுமளவுக்கு உந்தித் தள்ளப் படுகின்றனர்.

பிரபல திரை நட்சத்திரங்களாய் மின்னிய ஷோபா, விஜயஸ்ரீ, லட்சுமிஸ்ரீ, படாபட் ஜெயலட்சுமி, சில்க் ஸ்மிதா, விஜி, பிரதீக்‌ஷா, மோனல், ஜீவி போன்றோர் முதல் சராசரி மனிதர்கள் வரை அன்றாடம் தற்கொலை நிகழ்வுகள் நடந்துகொண்டே இருக்கின்றன. பாதுகாப்பற்ற தன்மையின் (Insecured feeling) எல்லைக்கே வந்து நிற்கும் போதுதான் தற்கொலை தவிர வேறுவழியில்லை என்ற மனநிலை உருவாகிறது. சராசரியாக 20 முதல் 30 சதவீதம் பேர்கள் வரை இந்த மனமுடக்கத்திற்கு ஆளாகிறார்கள். இம்மனநிலை சற்று நீடித்து நிலைக்குமானால் உறுதியாகத் தற்கொலை செய்து கொள்கின்றனர். இத்தகைய உணர்வும் எண்ணமும் தோன்றும் போது முறையான கவுன்சிலிங் மற்றும் ஹோமியோபதி மருந்துகள் மூலம் தற்கொலை முடிவிலிருந்து வெளியேற முடியும்.

அவமானம், நீடித்த மன உளைச்சல், ஏமாற்றம், விரத்தி போன்ற மனோ காரணங்களால் பாதிக்கபட்டு தற்கொலைக்கான தூண்டுதல் ஏற்படுகிறது. மன அழுத்தம், ஆழ்மன வருத்தம் போன்ற பாதிப்பதை நீக்க ‘இக்னேஷியா’ என்ற மருந்தும், கடுமையானவேதனையால் விரக்தியால் ஏற்படும் தற்கொலை உணர்வை மாற்ற ‘ஆரம்மெட்’ என்ற மருந்தும் பயன்படுகின்றன.

வாழநினைத்தால் வாழலாம்! வழியா இல்லை பூமியில்?

Depression என்ற சொல்லுக்கு சரியான பொருள் பள்ளம் Mind De Pression என்பது உள்ளத்தில் ஏற்பட்ட பள்ளம். மனவியலில் ‘மனத்தளர்ச்சி நோய்’ என்று விவரிக்கப்படுகிறது. 1.மனம் சார்ந்த சோர்வு 2.நரம்பியல் சார்ந்த சோர்வு என்று இருவகையாக இந்நோய் காணப்படுகிறது. மனம் சார்ந்த சோர்வு மனதிலேயே தோன்றுகிறது. நரம்பியல் சார்ந்த சோர்வு கடுமையான மன உளைச்சலின் விளைவாக தோன்றக்கூடியது. Depression காரணமாக தூக்கம் தூரப் போகக் கூடும், பசி பறி போகக் கூடும். தலைவலியும் உடல் அசதியும் துயரப்படுத்தக் கூடும். “தரை மீது காணும்யாவும் தண்ணீரில் போடும் கோலம்! வாழ்வே மாயம்!” என்று வாழ்க்கை மீதான விரக்தியும் வெறுப்பும் மேலோங்கக் கூடும். “சாவது ஒன்று தான் தீர்வு” என்று முடிவெடுக்கக் கூடும்.

இத்தகைய பாதிப்புகளை உண்டாக்கக் கூடிய மனசோர்வு நோயை முழுமையாகக் குணப்படுத்தக் கூடிய மருந்துகள் ஹோமியோபதியில் உள்ளன. பாதிக்கப்பட்டவரிடம் காணப்படும் அறிகுறிகளை ஆய்வு செய்து உரிய மருந்து கண்டறிந்து பயன்படுத்தினால் மனசோர்விலிருந்து உறுதியாக மீள முடியும்.

மருந்துகள் குறிகள்

  • அம்ப்ரா கிரிஸா - முதுமை காரணமாக மனத்தளர்ச்சி (Senile Depression)
  • கோனியம் - மாதவிடாய் காலத்தில், கர்ப்ப காலத்தில் மாதவிடாய் நிற்கும் (Menopause)  காலத்தில் ஏற்படும் மனசோர்வு.                                                                          
  • அக்னஸ் காஸ்டஸ் கலாடியம், ஜெல்சிமியம் - ஆண்மைக் குறைவு காரணமாக உள்ளத்தில் சோர்வும் விரக்தியும்
  • இக்னேஷியா -முரண்பாடுகளால், ஆழ்மன வருத்தங்களால், அழுகையால் மனத்தளர்ச்சி.
  • நக்ஸ்வாமிகா - விந்து வெளியேற்றத்தைத் தொடர்ந்து கடுமையான மனச்சோர்வு.
  • ஸ்டாபிசாக்ரியா - அவமானங்களாலும், பீறிடும் கோபத்தாலும் ஏற்படும் மனத்தளர்ச்சி, பாலியல் பிழைகளால், பலாத்காரம் அல்லது  நிர்பந்தமான பாலியல் உறவால் விரக்தி       
  • ஆரம்மெட் - வாழ்க்கை மீது வெறுப்புணர்ச்சியால் தற்கொலை எண்ணம்.
  • கோகா - அதிக உழைப்பின் காரணமாக மனசோர்வு.
  • காலி புரோமெட்டம் - திருப்தியற்ற உடலுறவுக்குப் பின் மனசோர்வு, ஒழுக்கக் குறைபாடு குறித்த பயமும் காணப்படும் (Fear of Moral deficiency).
  • காலி பாஸ் - அதிக பணிகளால், கவலைகளால், மனக் கிளர்ச்சிகளால், தூக்கமில்லாமையால் உடல் மனச்சோர்வு.
  • பாஸ்பரஸ் - தனக்கு குணப்படுத்த முடியாத இருதய நோய் இருப்பதாக பயந்து கடுமையான மனச்சோர்வும், விரக்தியும் அடைதல்.
  • பைடோலக்கா - கீல்வாதம் காரணமாக மனசோர்வு.
  • ஆர்ஸ் ஆல்பம் - அடிமனதில் மறைந்துள்ள குற்ற உணர்ச்சியால் மனச்சோர்வு, மருந்துகளால் பலனில்லை என்று எண்ணம், மனச்சோர்வு, பயம், பதற்றம், அமைதியற்ற தன்மை அனைத்தும் காணப்படும்.
  • மான்சினெல்லா - பூப்படையும் காலத்தில் பருவப் பெண்களிடம் ஏற்படும் மனச்சோர்வு நோய்.
  • லைகோபோடியம் - பள்ளித் தேர்வில் தோல்வி காரணமாக ஏற்படும் மனசோர்வு நோய்.
  • பல்சடில்லா - இயக்குநீர் இயக்க மாற்றங்களால் (Hormonal Changes) மனச்சோர்வு, அழும் சுபாவம், அனுதாபத்தை, ஆறுதலைத் தேடும் ஏக்கம், குளிர்பானங்களில் விருப்பம், புத்துணர்வூட்டும் காற்றில் நாட்டம்.

Dr.S.வெங்கடாசலம்

மாற்றுமருத்துவ நிபுணர், சாத்தூர்

Cell : 9443145700 / Mail : alltemed@g,mail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com