தில்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் இருந்து முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் விடுவிக்கப்பட்டிருப்பது, பாஜகவுக்கு தார்மீக மரண தண்டனை அளிக்கப்பட்டதற்கு இணையானது என்று சமாஜவாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
தில்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் இருந்து முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்பட 23 பேரை தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விடுவித்தது.
மேலும், சிபிஐ பொய்யாக ஜோடித்த வழக்கு என்று தெரிவித்துள்ள நீதிமன்றம், சிபிஐக்கு கண்டனம் தெரிவித்ததுடன் துறை ரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த தீர்ப்பு குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அகிலேஷ் யாதவ் தெரிவித்திருப்பதாவது:
”தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுடன் நீதியும் உண்மையும் துணை நிற்கின்றன. குற்றச்சாட்டு எவ்வளவு பெரிதாக இருந்தாலும், அது உண்மையை மறைத்துவிட முடியாது.
இன்று நேர்மையான ஒவ்வொரு மனிதரும் பெருமூச்சு விடுவார்கள். பாஜக ஆதரவாளர்கள் ஆழ்ந்த அவமானத்தில் துடித்துக் கொண்டிருப்பார்கள். தில்லி மக்களுக்கு பாஜக துரோகம் செய்துள்ளது.
சுதந்திரத்துக்கு முன்பு, நாட்டின் எதிரிகளுடன் இணைந்து, சுதந்திரப் போராளிகளை தூக்கு மேடைக்கு அனுப்பிய தற்போதைய அரசின் நண்பர்கள், சுதந்திர போராட்ட வீரர்களுக்கு எதிராக தகவல் கொடுப்பவர்களாகவும், நாட்டை அடிமைப்படுத்திய ஏகாதிபத்தியவாதிகளிடம் மன்னிப்புக் கேட்டு அவர்களுக்காக அளவ்வு பார்த்தவர்களாகவும் இருந்தவர்கள். அந்த சித்தாந்தவாதிகளின் வாரிசுகள் இன்று மக்கள் மத்தியில் முகத்தை காட்டும் தகுதியை இழந்துவிட்டனர்.
இன்றைய தீர்ப்பு பாஜகவினருக்கு தார்மீக மரண தண்டனைக்கு இணையானது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Summary
Kejriwal's release is a moral death sentence for BJP! Akhilesh Yadav
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

56 போ் கொல்லப்பட்ட தொடா் குண்டுவெடிப்பு வழக்கு: 38 இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை; குஜராத் உயா்நீதிமன்றம் உறுதி செய்தது

சிறப்பான பயணத்தை தொடங்கியுள்ளீர்கள்; சூர்யவன்ஷிக்கு சூர்யகுமார் யாதவ் வாழ்த்து!

அரசியல் வன்முறையை பாஜக தூண்டுகிறது: அகிலேஷ் குற்றச்சாட்டு!








