டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

ஆணுறை தெரியும், பெண்ணுறை அறிவீர்களா?

ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும், திருமணம் என்கிற பந்தம் முடிந்த பிறகு, வீட்டில் உள்ளவர்கள் அடுத்த நல்ல சமாச்சாரத்தைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

News image
Updated On :13 ஜூன் 2018, 11:17 am IST


ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும், திருமணம் என்கிற பந்தம் முடிந்த பிறகு, வீட்டில் உள்ளவர்கள் அடுத்த நல்ல சமாச்சாரத்தைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், இன்றைய கால கட்டத்தில், இளவட்டங்கள், பெரும்பாலும், குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளி போடத்தான் விரும்புகிறார்கள். இன்னும் சில வருடங்கள் ஜாலியாக இருந்து விட்டு பிறகு அதைப் பற்றி யோசிக்கலாம் என்பதுதான் அவர்களின் எண்ணமாக இருந்து வருகிறது. 

Story image

பிள்ளைப் பேற்றினைத் தள்ளிப் போட புதுமணத் தம்பதியினர் பல கருத்தடை முறைகளை பின்பற்றி வருகிறார்கள். அதில் ஒரு வகை கர்ப்பத்தடை மாத்திரைகள். சில பெண்கள்,  மருத்துவரின் அறிவுரையோடு மாத்திரையை விழுங்குகிறார்கள். ஆனால், பிள்ளை  பெற்றுக் கொள்ள நினைக்கும் போது, இத்தனை நாட்கள் சாப்பிட்ட மாத்திரைகள் ஏதேனும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தி விடுமோ? அதனால், பிறக்கும் குழந்தை ஊனத்துடன் பிறக்குமோ? என்கிற பயம் தொற்றிக் கொண்டு விடுகிறது. அப்போது மருத்துவர் எவ்வளவு தேற்றினாலும் அத்தம்பதியினர் திருப்தி அடைவது இல்லை.

Story image

அதனால் கர்ப்பத்தைத் தள்ளிப் போட  ஆரோக்கியத்தைக் கெடுக்காத வண்ணம் ஆண்கள், உடலுறவின் போது, ஆணுறையை அணிந்து கொள்கிறார்கள். இதன் மூலம், முழு அளவு திருப்தி உண்டாவதில்லை என்று பல ஆண்கள்  கூறி வந்தாலும், பெண், கர்ப்பம் தரிப்பது தவிர்க்கப்படுகிறது. அதிலும் சில சமயங்களில், கவனக் குறைவால், எதிர்பார்க்கும் பலன் அதாவது கர்ப்பத்தடை சரியாக அமைவதில்லை என்கிற குறைபாடும் உண்டாகிறது. அதனால், ஆண்கள் ஆணுறையைத் தவிர்க்க எண்ணம் கொள்கிறார்கள்.

Story image

ஆண்களின் இந்தப் பிரச்னையை போக்க, பெண்ணுறைகள் சந்தைக்கு வந்து விட்டன. அதாவது, ஆணுக்குப்  பதில் பெண்ணானவள் தன்னுடைய உறுப்பில் உறையைப் பயன்படுத்துவதுதான். மருத்துவக் கண்ணோட்டத்தில், ஆணுறையை விட பெண்ணுறை கூடுதல் பலனை அளிப்பதாகக் கூறப்படுகிறது. இந்தக் கருத்தடைச் சாதனம், பால்வினை நோய்கள்  பரவாமல் பாதுகாப்பதுடன், விந்தணுக்கள், கருமுட்டையை அடைந்து கருவுறாமல் காக்கிறது.

பாலியூரத்தீன் எனப்படும் மெல்லிய பிளாஸ்டிக்கால் பெண்ணுறைகள் தயார் செய்யப்படுகின்றன. இவற்றை பேக்கிங்கிலிருந்து வெளியே எடுக்கும் போது கூரான பொருட்களைக் கொண்டு வெளியே எடுக்கக் கூடாது. அப்படி எடுத்தால், பெண்ணுறை சேதம் அடைந்துவிடும். பின்பு எதிர்பார்க்கும் பலனைத் தராது. பொறுமையைக் கையாள வேண்டும்.

Story image

கடையிலிருந்து வாங்கும் போது, பொருள் காலாவதியாகும் தேதியைப் பார்த்து வாங்க வேண்டும். இவற்றை சரியான முறையில் பயன்படுத்தும் பொழுது, 95% பலன் தருவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். முக்கியமாக இந்தக் கருத்தடை சாதனத்தினை மருத்துவரின் ஆலோசனை அல்லது பரிந்துரை பெறாமலே பயன் படுத்தலாம் என்பதுதான் ப்ளஸ் பாயிண்ட். மேலும் தேவையான சமயத்தில் மட்டும் உபயோகப் படுத்தினால் போதும். ஆணுறை போல் ஆரம்ப நிலையிலிருந்தே உபயோகிக்க வேண்டிய அவசியம் கிடையாது. இதனால் பக்க விளைவுகள் எதுவும் உண்டாகாது.

Story image

இதை சரியான முறையில் எப்படி  பயன்படுத்துவது என்பதைப் பார்ப்போம். இந்த சாதனம் ஒரு சிறிய குழல் போன்ற பை போன்று  தோற்றம் அளிக்கும். இரு முனைகளிலும், நெகிழ்தலான வளையங்கள் காணப்படும். மூடிய முனையை உடல் உறுப்புக்குள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆழத்தில் பொருத்திக் கொள்ள வேண்டும். திறந்த முனை உறுப்பின் வெளி பாகத்தை முழுவதுமாக கவர் செய்து விடும். ஆண்  பெண்ணின் தேவை பூர்த்தி ஆனவுடன், வெளிப்புறம் இருக்கும் வளையத்தை சிறிது முறுக்கினாற்போல் வெளியே எடுக்க வேண்டும்.

Story image

அழகைப் பராமரிக்கவோ அல்லது கர்ப்பத்தைத் தள்ளிப் போடவோ தெரியாது. அனேக புதுமணத் தம்பதிகள் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் எதனாலோ புரியவில்லை. அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ள நினைக்கும் போது அந்த சௌபாக்கியம் பலருக்கு அமைவதில்லை. பிறகு ஜோசியரைப் பார்ப்பதும் கோயில் கோயிலாக வேண்டுதலைச் செலுத்தியும் வருகிறார்கள். மனச் சுமை, பண விரயம், நேர விரயம் என பலதும் உண்டாகிறது. 

Story image

உடலில் உண்டான சில குறைபாடுகளால் கர்ப்பம் தரிப்பது தள்ளிப் போகலாம். ஆனால் வலிய நாமே வம்பினை விலைக்கு வாங்குவானேன்? எது எது காலா காலத்தில் நடக்க வேண்டுமோ அதை இயற்கையின் வழியிலேயே விட்டுவிடுவதுதான் நல்லது. பெண்ணுறையைப் பற்றி கூறிவிட்டு கூடவே உபதேசமா? என்று எண்ண வேண்டாம். பக்க விளைவுகள் இல்லாமல் பெண்கள் பாதுகாப்பான முறைகளை மேற்கொள்ளவே இந்தக் கட்டுரை. ஆரோக்கியம் பேணுங்கள். ஆனந்த  வாழ்வினை அனுபவியுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.