தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

பிட்டி மொஹந்திக்கு10 நாள் போலீஸ் காவல்

ஜெர்மன் நாட்டுப் பெண்ணைப் பலாத்காரம் செய்த குற்றவாளி பிட்டி மொஹந்தியை 10 நாள் போலீஸ் காவலில் வைக்க

Updated On :11 மார்ச் 2013, 9:55 pm

ஜெர்மன் நாட்டுப் பெண்ணைப் பலாத்காரம் செய்த குற்றவாளி பிட்டி மொஹந்தியை 10 நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஒடிசா மாநில முன்னாள் போலீஸ் டிஜிபி பி.பி.மொஹந்தியின் மகன் பிட்டி மொஹந்தி, ராஜஸ்தானில் ஜெர்மனி நாட்டுப் பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் 7 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றார். ராஜஸ்தான் சிறையில் இருந்த அவர் 7 ஆண்டுகளுக்கு முன் பரோலில் வெளியே வந்தார். மீண்டும் சிறைக்குச் செல்லாமல் தலைமறைவாகி விட்டார். அவர் அதன் பின் கேரள மாநிலம் சென்று, ராகவ் ராஜன் என்ற போலியான பெயரில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றார். பின்னர், ஆவணங்களை மோசடி செய்து, வங்கி அதிகாரி தேர்வில் வெற்றி பெற்றார். அவருக்கு பொதுத்துறை வங்கி ஒன்றில் அதிகாரி பணிவாய்ப்பு கிடைத்தது. பழையங்காடி பகுதியில் உள்ள வங்கிக் கிளையில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் தில்லியில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பல்வேறு பாலியல் குற்றவாளிகளின் படங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. இந்தப் படங்கள், இணையதளங்களிலும் வெளியிடப்பட்டன. அவற்றில் பிட்டியின் படமும் இருந்தது. இதைக் கண்ட அவரது சக வங்கி ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் அளித்த தகவலின்பேரில் வங்கி அதிகாரிகள் போலீஸில் புகார் அளித்தனர். போலீஸôர், பிட்டியைக் கைது செய்தனர். அவரை பையனூர் முதன்மை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜர்படுத்தினர். பிட்டியிடம் மேல் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் அவரை 10 நாள் காவலில் வைக்க அனுமதிக்க வேண்டும் என்று போலீஸôர் கோரிக்கை வைத்தனர். அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி எஸ்.ஸ்மிதா, பிட்டியை 10 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.

எனவே, பிட்டியை முதலில் ராஜஸ்தான் மாநிலத்துக்கு அழைத்துச் சென்று அவரது அடையாளத்தை உறுதிப்படுத்த போலீஸôர் திட்டமிட்டுள்ளனர். இந்த விஷயத்தில் ராஜஸ்தான் போலீஸின் உதவியையும் நாடியுள்ளனர். அதன் பிறகு, ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு அவரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தவும் போலீஸôர் திட்டமிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.