கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

பிரசிடென்சி பல்கலைக்கழக வன்முறை: 2 பேர் கைது

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள பிரசிடென்சி பல்கலைக்கழகத்தில் வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக 2 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

Updated On :12 ஏப்ரல் 2013, 1:28 am IST

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள பிரசிடென்சி பல்கலைக்கழகத்தில் வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக 2 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து காவல் துறை இணை ஆணையர் ஜாவேத் ஷமீம் கூறியது: பிரசிடென்சி பல்கலைக்கழகத்தில் உள்ள பேக்கர் ஆய்வகம் (இயற்பியல் துறை) மற்றும் வேறு சில துறைகள் மீது புதன்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக சுபாதிப் பர்மன் மற்றும் ஜெயந்தா ஆகிய 2 பேரைக் கைது செய்துள்ளோம். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார். எனினும், கைது செய்யப்பட்டவர்கள் எந்த கட்சியைச் சேர்ந்தவர்கள் என்ற விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை. தில்லியில் மேற்குவங்க நிதியமைச்சர் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சிக் கொடியுடன் வந்த சிலர் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக இந்திய மாணவர் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.