மேற்குவங்க மாநிலத்தில் உள்ள பிரசிடென்சி பல்கலைக்கழகத்தில் வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக 2 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து காவல் துறை இணை ஆணையர் ஜாவேத் ஷமீம் கூறியது: பிரசிடென்சி பல்கலைக்கழகத்தில் உள்ள பேக்கர் ஆய்வகம் (இயற்பியல் துறை) மற்றும் வேறு சில துறைகள் மீது புதன்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக சுபாதிப் பர்மன் மற்றும் ஜெயந்தா ஆகிய 2 பேரைக் கைது செய்துள்ளோம். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார். எனினும், கைது செய்யப்பட்டவர்கள் எந்த கட்சியைச் சேர்ந்தவர்கள் என்ற விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை. தில்லியில் மேற்குவங்க நிதியமைச்சர் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சிக் கொடியுடன் வந்த சிலர் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக இந்திய மாணவர் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீட் வினாத்தாள் கசிவு: நீதிமன்றக் காவலில் உள்ள மூவரிடம் சிபிஐ விசாரிக்க அனுமதி!

பாலன் வன்முறைப் படமல்ல: இயக்குநர் சிதம்பரம்

மகாநதி தொடர் கடைசிநாள் படப்பிடிப்பில் கண்கலங்கி அழுத நடிகர்கள்!

நீர் அருந்துவதால் இவ்வளவு பலன்களா?
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


