சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்துள்ள மத்திய அரசின் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.
அரசின் இந்த முடிவை எதிர்த்து வழக்குரைஞர் எம்.எல். சர்மா என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
சில்லறை விற்பனையை கட்டுப்படுத்தும் சம்பந்தப்பட்ட சட்டவிதிகளில் எவ்வித திருத்தமும் கொண்டு வராமல் வெறும் பத்திரிகை அறிக்கை வாயிலாக சில்லறை வர்த்கத்தில் அன்னிய முதலீடு அறிமுகம் செய்யப்பட்டது என்று மனுவில் சர்மா குறிப்பிட்டிருந்தார்.
நுகர்வோரின் நலனுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ள நீதிமன்றம், சில்லறை வர்த்தகத்தில் இடைத் தரகர்கள் என்பவர்கள் விரோதிகள், பொருளாதாரத்தை அட்டை போல உறிஞ்சுபவர்கள். அவர்களை நீக்குவதன் மூலம்தான் உற்பத்தியாளருக்கும், நுகர்வோருக்கும் அதிக பலன் கிடைக்கும் என்று இந்த மனு மீதான விசாரணையின் போது நீதிமன்றம் கூறியுள்ளது.
அரசு எடுக்கும் ஒரு கொள்கை முடிவு, அரசியல் சாசன சட்டத்துக்கு விரோதமாக இருந்தால் மட்டுமே நீதிமன்றம் அதில் தலையிட முடியும் என்று இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மதன் பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு கூறியுள்ளது.
பல இலச்சினை சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுவதன் மூலம் இடைத்தரகர்கள் ஒழிக்கப்படுவார்கள். இதன் மூலம் நுகர்வோரும், உற்பத்தியாளர்களும் நன்மையடைவார்கள். விவசாயிகளிடம் இருந்து கிலோ ஒரு ரூபாய் விலையில் வாங்கப்படும் வெங்காயம் சந்தையில் ரூ.25-க்கு விற்கப்படுகிறது என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
இது தொடர்பாக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், சீனா, ஹாங்காங், இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு அனுமதிக்கப்பட்டது நன்மை அளித்துள்ளது சுட்டிக்காட்டப்பட்டது. அதனை உதாரணமாகக் கூறிய நீதிபதிகள், அதே போன்ற நன்மைகள் இந்தியாவிலும் ஏற்படும் என்றும் ஏன் எதிர்பார்க்கக் கூடாது என்று கேள்வி எழுப்பினர்.
ஒரு வேளாண் பொருளுக்கு நுகர்வோரிடம் பெறும் விலையில் 12 முதல் 15 சதவீதம் வரையே விவசாயிகளைச் சென்றடைகிறது. மீதமுள்ளவற்றை நடுவில் உள்ள இடைத்தரகர்களே பகிர்ந்து கொள்கின்றனர் என்று உலக வங்கியின் அறிக்கையும் அரசு சார்பில் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வருமான வரி- சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் மேல்முறையீடு

தமிழில் வெளியாகும் வாழ - 2!

7 ஆண்டுகளுக்குப் பின்.. இந்தியாவில் நங்கூரமிட்ட ஈரானிய எண்ணெய் கப்பல்கள்

நெல் ஊக்கத்தொகை: முதல்வர் ஸ்டாலின் கேட்ட கடிதத்தை வெளியிட்ட நிர்மலா சீதாராமன்!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

