சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

சீட்டு நிதி நிறுவனங்கள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு பிரசாரம்

சீட்டு நிதி நிறுவனங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும் என மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் கே.வி. தாமஸ் தெரிவித்துள்ளார்.

Updated On :1 மே 2013, 11:02 pm IST

சீட்டு நிதி நிறுவனங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும் என மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் கே.வி. தாமஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் புதன்கிழமை கூறியதாவது: சாரதா நிதி நிறுவன மோசடி உள்பட பல்வேறு மோசடிகளால் முதலீட்டாளர்கள் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து துறைரீதியாக ஆய்வு செய்யும்படி உத்தரவிட்டேன். எனினும் எமது இலாகா ரீதியில் பெரிய அளவில் ஒன்றும் சாதித்து விட முடியாது.

நிதி நிறுவன மோசடிகள் தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் தான் உரிய நடவடிக்கை எடுக்க முடியும்.

எனினும் சீட்டு நிதி நிறுவனங்களில் முதலீடு செய்வதில் உள்ள பிரச்னைகள் பற்றி பொதுமக்களிடம் பிரசாரம் செய்யப்படும். கிரெடிட் கார்டு பயன்பாடு, காப்பீட்டு திட்டங்களில் முதலீடு செய்தல், பங்கு வர்த்தகம் தொடர்பாக விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படும் என்றார் தாமஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.