கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

சி.பி.ஐ.க்கு 730 கோப்புகள் வழங்கியதாக மத்திய நிலக்கரி அமைச்சகம் தகவல்

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக சி.பி.ஐ.க்கு இதுவரை 730 கோப்புகள் வழங்கி உள்ளதாக மத்திய நிலக்கரித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Updated On :2 மே 2013, 1:55 am IST

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக சி.பி.ஐ.க்கு இதுவரை 730 கோப்புகள் வழங்கி உள்ளதாக மத்திய நிலக்கரித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக இதுவரை 730 கோப்புகள், வழங்கப்பட்டன. மேலும் 10 கோப்புகள் எங்களிடம் உள்ளன. அவற்றையும் பெற்றுக் கொள்ளுமாறு சி.பி.ஐ.க்கு தெரிவித்துள்ளோம்.

கடந்த 2004-ம் ஆண்டுக்கு முந்தைய சுரங்க ஒதுக்கீடு தொடர்பான 25 கோப்புகள் காணாமல் போய்விட்டன. அவற்றை கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சி.பி.ஐ.க்கு தேவையான உதவிகளை செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் சுரங்கங்களை ஒதுக்கக் கோரும் விண்ணப்பங்கள் தொடர்பான ஆவணங்களும் காணவில்லை. அவற்றை தேடிக் கண்டுபிடித்து சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்போம் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.