சீன ஊடுருவல் பிரச்னையில் மத்திய அரசு மிகவும் பலவீனமான கொள்கைகளை பின்பற்றுவதாக வி.எச்.பி. புகார் கூறியுள்ளது.
இதுதொடர்பாக ஜம்மு-காஷ்மீர் மாநில வி.எச்.பி. தலைவர் டாக்டர் ரமாகாந்த் துபே புதன்கிழமை கூறியதாவது:
லடாக்கில் சீனா ஊடுருவியதை உள்ளூர் பிரச்னை என பிரதமர் மன்மோகன் சிங் கூறி உள்ளார். அதே போல் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே அப்பகுதியில் மனிதர்கள் எவரும் வாழ்வதில்லை எனக் கூறி உள்ளார்.
இதுபோன்ற அறிக்கைகளால் நாட்டின் பாதுகாப்பே கேள்விக்குறியாகிறது. மத்திய அமைச்சர்கள் சல்மான் குர்ஷித், பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனியும் சீன ஊடுருவல் பிரச்னை தொடருவதற்கு பொறுப்பேற்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியவில்லை என்றால் பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலவி விடலாம்.
தற்போதைய மத்திய அரசு ஊழல் நிறைந்ததாக உள்ளது. பாலியல் பலாத்காரம், நிதி நிறுவன மோசடிகள் என நாட்டை பாதிக்கும் பிரச்னைகளை கவனிக்க அரசுக்கு நேரமில்லை.
சீன ஊடுருவலை முடிவுக்கு கொண்டு வர பொருளாதார, தூதரக, ராணுவ ரீதியிலான நடவடிக்கைகளை இந்தியா எடுக்க வேண்டும். சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களை இந்திய மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றார் துபே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எல்ஐகே வசூல் எவ்வளவு?
முந்தி நிற்கும் முதல்வர் வேட்பாளர் ? | MK Stalin | EPS | NTK Seeman | TVK Vijay | TN Election 2026

வளைகுடா நாடுகளின் துறைமுகங்களைத் தாக்குவோம்: ஈரான் எச்சரிக்கை!

பில்லி பிஸ்வாஸின் விநோத வழக்கு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

