திருநெல்வேலி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த மழையால் மணிமுத்தாறு அருவியில், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று(ஜூன் 16) அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 1ஆம் தேதி முதல் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையால், மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து கணிசமாக அதிகரித்தது.
குறிப்பாக மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட மலைப் பகுதிகளில் பெய்து வந்த தொடர் மழை காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து, ஜூன் 4ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். அருவியைப் பார்வையிட மட்டும் அனுமதித்தனர். 12ஆவது நாளாக திங்கள்கிழமையும் தடை நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், மணிமுத்தாறு அருவியில் நீர் வரத்து குறைந்ததால்,12 நாள்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Summary
Permission has been granted today (June 16) for tourists to bathe at Manimutharu Falls, following a ban imposed due to rains in the Western Ghats region of Tirunelveli district.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










