புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

வடமாநிலங்களில் அனல் காற்று: 3 பேர் சாவு

வடமாநிலங்களில் வீசி வரும் கடும் அனல் காற்றால் பாதிக்கப்பட்டு மத்தியப்பிரதேசத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

Updated On :22 மே 2013, 2:29 am IST

வடமாநிலங்களில் வீசி வரும் கடும் அனல் காற்றால் பாதிக்கப்பட்டு மத்தியப்பிரதேசத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

வட மாநிலங்களில் கடும் அனல்காற்று வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.

இதன் எதிரொலியாக மத்தியப்பிரதேசத்தில் 50 வயது மதிக்கத்தக்க முதியவர், பயிற்சிக் காவலர், ஒரு இளைஞர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

ஹரியாணா-பஞ்சாப்: பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களிலும் கடும் அனல் காற்று வீசுகிறது. இம்மாநிலங்களில் வெப்பநிலை 42 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி உள்ளது. ஹரியாணா மாநிலத்தில் ஹிஸார், குர்கான், பிவானி, கர்னால், அம்பாலா உள்ளிட்ட பகுதிகளில் கடும் வெப்பக்காற்று வீசியது.

பஞ்சாப் மாநிலத்தில் அமிருதசரஸ், லூதியானா, பாட்டியாலா நகரங்களிலும் கோடை வெப்பம் கடுமையாக இருந்தது.

இதே நிலை மேலும் சில நாள்கள் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.