தமிழகத்துக்கு இந்த மாதத்துக்கான காவிரி நீர் பங்கீடு அளவை முடிவு செய்ய காவிரி மேற்பார்வைக் குழுவின் கூட்டம் புதன்கிழமை (ஜூன் 12) தில்லியில் கூடுகிறது.
இக்கூட்டத்தில் காவிரி நடுவர் மன்ற இறுதி உத்தரவின்படி, தமிழகத்துக்கு இந்த மாதம் 10 டிஎம்சி நீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்று தமிழகம் வலியுறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய நீர்வளத் துறையின் செயலரும், மேற்பார்வைக் குழுவின் தலைவருமான எஸ்.கே. சர்காரின் தலைமையில் புதன்கிழமை மாலை 3 மணியளவில் தில்லி ஸ்ராம் சக்தி பவனில் இக்கூட்டம் நடைபெறுகிறது.
இதில் தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலர் ஷீலா பாலகிருஷ்ணன், பொதுப் பணித் துறைச் செயலர் சாய் குமார், கர்நாடக தலைமைச் செயலர் எஸ்.வி. ரங்கநாத், கேரள தலைமைச் செயலர் பாரத் பூஷண், புதுச்சேரி தலைமைச் செயலர் சேட்டன் பி. சங்கி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இக்கூட்டத்தில், "தமிழகத்தின் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையைத் திறந்துவிட வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு உள்ளது.
ஆகையால், காவிரியில் இருந்து தமிழகத்துக்கு ஜூன் மாதத்துக்கான நீரை உடனடியாக கர்நாடகம் திறந்துவிட வேண்டும்' என்று தமிழகத்தின் சார்பில் வலியுறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடகத்தில் தென் மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளதால், நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த ஒரிரு நாள்களாக மழை பெய்து வருகிறது. ஆகையால், கர்நாடக அணைகளிள் உள்ள நீர்மட்டத்தின் அளவைக் கணக்கிட்டு, அது குறித்த தகவலை இக்கூட்டத்தில் மத்திய நீர் ஆணையம் தெரிவிக்கும் என்று தெரிகிறது. அதை அடிப்படையாக வைத்து தமிழகத்துக்கான நீர் அளவை காவிரி மேற்பார்வைக் குழுவின் தலைவர் எஸ்.கே. சர்கார் முடிவு எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட மேற்பார்வைக் குழுவின் முதல் கூட்டம் ஜூன் 1-ஆம் தேதி நடைபெற்றது.
அப்போது, கர்நாடகத்தில் பருவ மழை தொடங்காத காரணத்தால் தமிழகத்துக்குத் தண்ணீர் தர இயலாது என்று கர்நாடக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்தது.
அதையடுத்து, எந்தவித முடிவும் எடுக்கப்படாமல் அந்தக் கூட்டம் ஜூன் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுகவின் தோ்தல் அறிக்கை வெற்றிக்கு வழிவகுக்கும்: சிபிஐ மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்

ஏப்.19 முதல் 21 வரை தோ்தல் அலுவலா்கள் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு
மறுவரையறை மசோதா தோல்வியின் கொண்டாட்டங்கள் கண்டிக்கத்தக்கது: அமித் ஷா

தாமதமாக வந்ததால் பேச முடியாமல் சென்ற சசிகலா
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


