ராஜஸ்தான் மாநில எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இரு வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் அவ்விருவரும் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக ராணுவ வட்டாரத்தில் கூறப்படுவதாவது:÷எல்லைப் பாதுகாப்புப் படையை சேர்ந்தவர்கள் தீபேந்தர் சிங், பாதல். இவ்விருவரும் வெள்ளிக்கிழமை காலை ஸ்ரீகங்காநகர் மாவட்டம், அனுப்கார் ஷிப்னி பகுதியில் உள்ள இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதில், ஒருவரையொருவர் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சம்பவம் குறித்து விசாரிக்க ராணுவ உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுளளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







