சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளுடன் நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் காவலர் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்தனர்.
கோண்டாகான் மாவட்டத்தில் நக்சலைட்டுகளை தேடும் பணியில் போலீஸôர் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்கள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர். கேஷ்கால் நகரில் உள்ள பார்கான் பகுதியில் பாதுகாப்புப் படை வீரர்களை வழிமறித்த 40 நக்சலைட்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். வீரர்கள் தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தச் சண்டையில் காவலர் சஞ்சய் மாண்டவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தலைமைக் காவலர் கமலேஷ், காவலர்கள் தனசிங், அமர் சச்லாம் ஆகியோர் காயமடைந்தனர்.
தாக்குதலை நடத்திய பின், நக்சலைட்டுகள் அடர்ந்த வனப் பகுதிக்குள் தப்பியோடி விட்டனர். அவர்களை தேடும் பணியில் பாதுகாப்புப் படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று கோண்டாகான் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் டி.ஷ்ரவன் தெரிவித்தார்.
இத்தாக்குதலில் நக்சலைட்டுகள் பலருக்கும் காயமேற்பட்டிருக்கலாம் என்றும், அவர்களை சக தீவிரவாதிகள் மீட்டுச் சென்றுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் ரூ.100 கோடி வசூலித்த வாழ - 2..! புதிய சாதனை!
நாட்டின் அரசியல் வரைபடத்தையே மாற்றும் முயற்சி! ராகுல் காந்தி

மிஸ்பண்ணிடாதீங்க... இந்தியன் வங்கியில் 350 சிறப்பு அலுவலர் பணி!

காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்குப் பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

