தெலங்கானா மாநிலம் உருவாக ஒப்புதல் அளித்துள்ளது மேலும் புதிய மாநிலங்கள் மட்டுமின்றி புதிய மாவட்டங்களை உருவாக்குவதற்கான கோரிக்கைகளை ஊக்குவிக்கும் என்றும், இது நாட்டை பலவீனப்படுத்தும் என்றும் சமூக சேவகர் அண்ணா ஹசாரே கூறினார்.
வலுவான ஜன லோக்பால் மசோதாவுக்கு மக்களின் ஆதரவைத் திரட்டுவதற்காக அவர் மேற்கொண்டுவரும் ஜனதந்திர யாத்திரையின்போது பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:
தெலங்கானா மாநிலத்தை உருவாக்க அரசு தொடங்கியுள்ள நடவடிக்கைகள் பல்வேறு மாநிலங்கள் மட்டுமல்ல, புதிய மாவட்டங்களுக்கான கோரிக்கைகளையும் வலுப்படுத்தும். இது நாட்டை பலவீனப்படுத்தவே செய்யும்.
ஐ.ஏ.எஸ் அதிகாரி சக்தி நாக்பாலின் தாற்காலிக பணிநீக்கம் துரதிருஷ்டவசமானது. அவரைப் போன்ற நேர்மையான அதிகாரிகள் கிடைப்பது அரிது என்பதால் உத்திரப் பிரதேச அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும்.
ஜன லோக்பால் மசோதாவைக் கொண்டுவரக் கோரி வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் முதல் நாளில் உண்ணாவிரதத்தைத் தொடங்குவேன். அந்த மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர்ந்து போராடுவேன் என்றார் அண்ணா ஹசாரே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாணவனே, மாணவியே! நீ தலைவன் ஆகணும்!

ஃபிஃபா உலகக் கோப்பை: 7 கோல்கள் அடித்து ஜெர்மனி அபார வெற்றி!

லவ் ஓ லவ் திரைப்படத்தின் டீசர்!

புதிய முகங்களுக்கு வாய்ப்பு: தில்லி பாஜகவில் வரவிருக்கும் மாற்றங்கள்!
விடியோக்கள்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி



