தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

"உணவுப் பாதுகாப்பு மசோதா: பாஜக எதிர்க்காது'

உணவுப் பாதுகாப்பு மசோதாவை நாடாளுமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சி எதிர்க்காது என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2013, 2:40 am IST

உணவுப் பாதுகாப்பு மசோதாவை நாடாளுமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சி எதிர்க்காது என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இந்த மசோதா நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை விவாதத்துக்கு வரவுள்ள நிலையில், அவர் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. தில்லியில் அவர் பத்திரிகையாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி வருமாறு: உணவுப் பாதுகாப்பு மசோதாவை நாடாளுமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சி எதிர்க்காது. அந்த மசோதாவை ஆதரிப்போம்.

பல ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பில் இருந்தும், காங்கிரஸ் கட்சியால் நாட்டில் வறுமையை ஒழிக்க முடியாதது துரதிருஷ்டவசமாகும். ஏழைகளுக்கு அடிப்படை உணவைக் கூட காங்கிரஸால் அளிக்க முடியவில்லை.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தவறான ஆட்சியின் காரணமாகவே, ஏழைகள் ஏழைகளாகவே உள்ளனர். தில்லியில் மட்டும் ஒரு கோடி பேர் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி வாழ்கின்றனர்.

பாஜக ஆட்சிக்கு வந்தால் அடுத்த ஐந்து அல்லது ஏழு ஆண்டுகளில் வறுமை முழுவதுமாக ஒழிக்கப்படும் என்றார் ராஜ்நாத் சிங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.