திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

மன்மோகன் சிங் வாழ்த்து

பாகிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நவாஸ் ஷெரீபுக்குப் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image
Updated On :13 மே 2013, 4:59 am IST

பாகிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நவாஸ் ஷெரீபுக்குப் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதற்காக நவாஸ் ஷெரீபுக்கும் அவரது கட்சிக்கும் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இரு தரப்புக்கும் வசதியான நேரத்தில் இந்தியாவுக்கு வருமாறு ஷெரீபுக்குப் பிரதமர் அழைப்பு விடுத்தார்.

மேலும், வன்முறை தொடர்பான அச்சுறுத்தல்களை முறியடித்து, பெருவாரியாக வாக்களித்த மக்களையும், தேர்தலில் பங்கேற்ற அரசியல் கட்சிகளையும் அவர் வாழ்த்தியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் புதிய சகாப்தத்தைத் தொடங்குவதில் பாகிஸ்தானின் புதிய அரசுடன் இணைந்து பணியாற்ற இந்தியா ஆர்வம் கொண்டிருப்பதை பிரதமர் வெளிப்படுத்தினார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.