பாகிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நவாஸ் ஷெரீபுக்குப் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதற்காக நவாஸ் ஷெரீபுக்கும் அவரது கட்சிக்கும் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இரு தரப்புக்கும் வசதியான நேரத்தில் இந்தியாவுக்கு வருமாறு ஷெரீபுக்குப் பிரதமர் அழைப்பு விடுத்தார்.
மேலும், வன்முறை தொடர்பான அச்சுறுத்தல்களை முறியடித்து, பெருவாரியாக வாக்களித்த மக்களையும், தேர்தலில் பங்கேற்ற அரசியல் கட்சிகளையும் அவர் வாழ்த்தியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் புதிய சகாப்தத்தைத் தொடங்குவதில் பாகிஸ்தானின் புதிய அரசுடன் இணைந்து பணியாற்ற இந்தியா ஆர்வம் கொண்டிருப்பதை பிரதமர் வெளிப்படுத்தினார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாததற்கான காரணம் இதுதான்: தில்லி கேபிடல்ஸ் பயிற்சியாளர்

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

திரையரங்குகளில் தினசரி 5 காட்சிகளுக்கு அனுமதி! - முதல்வர் விஜய் உத்தரவு

ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் இணைந்தனர்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



