விசாகப்பட்டினத்தில் பேருந்து விபத்து: ஒருவர் பலி, 4 பேர் காயம்

விசாகப்பட்டினத்தில் அக்காயபாலாம் ரிது பஜார் பகுதியில் இன்று காலை பேருந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விசாகப்பட்டினத்தில் பேருந்து விபத்து: ஒருவர் பலி, 4 பேர் காயம்
Updated on
1 min read

விசாகப்பட்டினத்தில் அக்காயபாலாம் ரிது பஜார் பகுதியில் இன்று காலை பேருந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ரிது பஜார் பகுதியில் இன்று காலை பேருந்தின் பிரேக் திடீரென அறுந்ததால் நிலைதடுமாறி சாலையில் உள்ள 5 பேர் மீது மோதியது. இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தோர்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆதித்தியா டிராவல்ஸ்க்கு சொந்தமான தனியார் பேருந்தில் தீடிரென பிரேக் வைர் அறுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com